
1எம்டிபி நிதி மோசடியில் தம் மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்த அரசு. முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் மீது நஜிப் ரசாக் 19 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், தம் மீதான நஜிப்பின் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று டோமி தோமஸின் எதிர்மனு நேற்று விசாரணக்கு வந்தபோது, நஜிப்பின் வழக்கறிஞர் ஃபிரோஸ் உசேன் அமாட், அரசின் மீதான வழக்கை நஜிப் மீட்டுக் கொள்வதாக அறிவித்தார். எனினும், டோமி தோமஸின் மீதான வழக்கைத் தொடரப் போவதாக நீதிபதி அமாட் பச்சேயிடம் அவர் தெரிவித்தார். அதற்கான காரணத்தை வழக்கறிஞர் தெரிவிக்கவில்லை.
