
மலேசிய மகளிருக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை
பிரச்சினை பக்காத்தான் ஆட்சி காலத்தில் அதிகமாக இல்லையென்று பத்து காவான் எம்பி
கஸ்தூரி பட்டு குறிப்பிட்டுள்ளார். இப்போது, இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்துக் கிளம்பி இருப்பதாகவும் வெளிநாட்டில் பிறக்கும் குழ்ந்தைகளுக்குத் தாயின் வழியாகக் குடியுரிமை கிடைக்க வழி இல்லை என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதால், சட்டத்தைத் திருத்துவதே அதற்கு ஒரே வழியாகும் என்று அவர் குறிப்பிட்டார். 2021இல் அது பற்றி ஆராய உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை என்னவானது என்றும் அதனை உடனடியாக வெளியிட்டு இப்பிரச்சினக்குத் தீர்வு காண வேண்டுமென்றும் கஸ்தூரி கேட்டுக் கொண்டார்.
