
பணவீக்கத்தைத் தடுக்க முடியாத செயற்குழுவைக் கலைக்க வேண்டுமென லிம் குவான் எங் கூறியிருப்பது அதிகப்பட்சமானது என்றும் அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு உரிமை இல்லையென்றும் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சரான லிம் குவான் எங், பேங்க் நெகாராவின் செயல்பாடுகளைப் பற்றி நன்கு தெரிந்துள்ளார். மேலும் மத்திய வங்கி எங்களைக் கேட்டுத்தான் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
பணவீக்கத்தைக் கண்காணித்து, விலைவாசியை ஆராய்ந்து, தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொண்டு, தொழில் முனைவோருடன் விவாதித்து பண வீக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையை தமது பணிக்குழு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆக, பணிக்குழு செயலற்றதாக ஆதாரமில்லாமல் குவாங் எங் கூறுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
