
நாட்டின் நீதித் துறையை விமர்சித்து அவதூறு பரப்பும் அரசியல்வாதிகள் முதலில் சட்டத்தை முழுமையாகப் படித்து,
புரிந்து கொண்ட பின்னர், தங்களது கண்டனங்களை வெளியிட வேண்டுமென தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் அறிவுறுத்தியுள்ளார்.
நஜிப் ரசாக்கின் தண்டனையை உறுதிப்படுத்தி, அவரை சிறைக்கு அனுப்பிய பின்னர், நீதித் துறையின் மீது கணக்கிலடங்கா கண்டனங்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டு வருகிறது.
அம்மாதிரியாக நடந்து கொள்வோர், தீர்ப்பின் அறிக்கையையும் அதற்கான காரணத்தையும் உணர்ந்த பின்னர், புகாரைத் தெரிவிக்க வேண்டும்.
ஆதார அடிப்டையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை, உணர்ச்சி மேலீட்டால் கொச்சைப்படுத்தக் கூடாதென்றும் தெங்கு மைமுன் கேட்டுக் கொண்டார்.
