
சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், மற்ற கைதிகளுக்கும் அதே போன்ற சிகிச்சையை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
வயிற்றுப் புண்(அல்சர்) நோயினால் அவதியுற்ற நஜிப் கடந்த வாரம் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பலவேறு சோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற அவரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் படாமல் அவரை சிறைக்கு அனுப்பியதில் அவரின் குடும்பதினர் அதிருப்தியை வெளிப்படுத்தி பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர்.
நேற்று, நஜிப்பிற்கு மிகச் சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டுமென பிரதமரும் உத்தரவிட்டுள்ளார்.
