
12 வகையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனைக்குப் பதிலாக வேறு வகையான தண்டனையை அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபார் தெரிவித்தார்.
அதில் போதைப் பொருள் வழக்குகளும் அடங்கும். அதனையடுத்து 22 வகையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனைகளுக்கும் மாற்றுத் தண்டனைகள் குற்றத்திற்கு ஏதுவாக இருக்க சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 1,337 கைதிகளின் தண்டனையை நிறுத்தி வைக்க அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
