
பினாங்கில் மருத்துவர் ஒருவரின் வீட்டிலிருந்து 69,000 ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடி, தப்பித்துச் சென்ற இந்தோனேசிய பணிப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
எல்லா வெஸ்தாரி(27) எனும் இந்தோனேசிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர்தான் அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள்
இந்நிலையில், தாமான் புக்கிட்டில் உள்ள அந்த வீட்டிலிருந்து நகைகளையும் தனது கடப்பிதழையும் எடுத்துக் கொண்டு, செப்டம்பர் 8ஆம் தேதியன்று அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளாள்.
அச்சம்பவம் குறித்து அவளின் முதலாளி அன்றைய தினமே போலீஸில் புகார் கொடுத்தார். 33 வயதான அவர் ஒரு மருத்துவரும் ஆவார்.
