
இவ்வாண்டு கெடா, பாலிங், கம்போங் ஈபோயில் 3 முறை வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.
வெள்ள சேதத்தை பார்வையிட்ட அதிகாரிகள் ஆற்றை ஆழப்படுத்தி, அகலப் படுத்துவதோடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேய்லி பாலத்திற்குப் பதிலாகப் புதிய பாலத்தைக் கட்டித் தர ம் வாக்குறுதியும் தந்தனர்.
அது பற்றி அக்கிராம மக்கள் கூறும் போது, அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்த எதுவும் நடக்கவில்லை என்றும், வெள்ளம் வந்த 3 முறையும் தங்களுக்கு அதிக செலவானதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் செத்தால்தான் இந்தக் கிராமத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்றும் வேதனையோடு குறிப்பிட்டனர்.
