
வேப் எனப்படும் மின் சிகரெட்டுகளை புகைப்பது இந்திய பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாட்டில் இந்தியப் பெண்கள் மத்தியில் வேப்சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி பிரிவு அதிகாரி வி.சுப்பராவ் தெரிவித்தார்.
இதனிடையே, பல்கலைக்கழக மற்றும் தனியார் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியிலும் இந்த வேப் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
