
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. வீட்டுக்கு தேவையான காய்கறிகள், கோழி, இறைச்சி, பழங்கள் உட்பட அனைத்து வகை பொருட்களை வாங்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது.
