
இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் 19இல் இருந்து 26ஆம் தேதி வரை, புகுந்து கொள்ளையிட்டு வந்த 15 வயதிலிருந்து 17க்கும் இடையிலான 5 இளைஞர்கள் கேலாங் பாத்தாவில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பள்ளியின் பூட்டுகளையும் கேட்டு, கிரில்களையும் லாவகமாக வெட்டி, ஆசிரியர் அறைகளில் புகுந்து கொள்ளையிட்டு வந்த காட்சிகள் சிசிடிவி பதிவில் காணப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் Rahmat Ariffin (ரஹ்மாட் அரிஃபின்) தெரிவித்தார்.
விசாரணைக்காக அவர்கள் 7 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
