
அம்னோவுக்கான மலாய்க்காரர்களின் ஆதரவு 27கஇல் இருந்து 18 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி) குறிப்பிட்டுள்ளார்.
எல்சிஎஸ் எனும் போர்க்கப்பல் ஊழல் விவகாரம் வெளிப்பட்ட பின்னர், அம்னோவுக்கான மலாய்க்காரர்களின் வாக்கு விகிதம் 8 விழுக்காடு குறைந்த காரணத்தினால்தான், 15ஆவது பொதுத்தேர்தலை இவ்வாண்டுக்குள்ளேயே நடத்த வேண்டுமென அம்னோ துடியாய்த் துடிப்பதாக ரபிஸி சுட்டிக்காட்டினார்.
பருவகால மழைச் சீற்றம் இவ்வாண்டு இன்னும் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மனித உயிர்களைக் காப்பாற்ற திட்டமிடும் நடவடிக்கையில் ஈடுபடுவதை விடுத்து, ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தை
