
முதல் வீட்டை வாங்குவோருக்கு 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சலுகை அளிக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கப்படுகிறது.
பொருளாதார நிலை இன்னும் மீட்சி பெறாத நிலையில், முதல் வீட்டை வாங்குவோருக்கு வருமான வரியில் இருந்து குறைந்தது ரிம. 30,000 வரைக்குமான விலக்கு தர அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வீடுகளின் விலையைக் கணிசமாகக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தும் வகையில் வரி விலக்கு வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


