
அடுத்தாண்டு முதல் ஆபத்து நிறைந்த சுய வேலை செய்வோருக்கு சொக்சோ சேவை கட்டாயமாக்கப்படுவதாக பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் அறிவித்தார்.
சுய தொழில் செய்வோர், உணவு, பொருள் விநியோகச் சேவையில் ஈடுபட்டுள்ளோர் சொக்சோவுக்கு மாதந்திர கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கப்படும். அத் தொழில்களில் ஈடுபடுவோர் சொசோவின் மாதாந்திரக் கட்டணத்தில் 20 விழுக்காடைச் செலுத்தும் வேளையில், அரசு 80 விழுக்காடை செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அடுத்தாண்டு கட்டாயமாக்கப் அமலுக்கு வருமென்றும் உணவு, பொருள் விநியோகிப்பாளர்கள். குடியானவர்கள், மீனவர்கள், அங்காடி கடைக்காரர்கள் கட்டாயமாக சந்தா செலுத்த வேண்டிவரும். இத்திட்டத்திற்கு அரசு 15 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
