
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி போது முடக்கம் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மக்களுக்கு உதவவும் அரசாங்கம் நான்காயிரம் கோடி வெள்ளி ஊக்குவிப்பு திட்டத்தை இன்று அறிவித்தது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மூன்று துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊக்குவிப்பு திட்டத்தை இன்றிரவு அறிவித்தார். சுகாதார வசதியை அதிகரிக்க 100 கோடி வெள்ளி, பரிவுமிக்க திட்டங்களுக்கு 3,300 கோடி வெள்ளி, வணிகங்கள் தொடரப்படுவதை ஆதரிக்க 600 வெள்ளி என்று அவர் சொன்னார்
மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் கூடுதல் மக்கள் பரிவுமிக்க உதவி, இலக்கியப்பட்ட கடனுதவி திட்டம், ஊதிய உதவித்தொகை திட்டம், சட்டப் பாதுகாப்பு, பரிவுமிக்க சிறப்பு உதவித் தொகை, பேருந்து, டாக்சி,ஹைலிங் உதவி, மின்சார கட்டண கழிவு ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
