
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தி இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் சொன்னார்.
இங மருத்துவ பரிசோதனை தொடர்பில் தமது தரப்பு காவல் துறைக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்பதோடு இனி நடைபெறவிருக்கும் பரிசோதனை இயக்கங்களின் போது பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
