
தமது பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் ஏழ்மை நிலையில் வாழும் இந்தியக் குடும்பத்துக்கு பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உதவிக்கரம் நீட்டினார்.
விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட குடும்ப மாது ஒருவர்,கேட்டுக் கொண்ட உதவிக்குப் பிறகு அவருக்கு நிதியுதவியும் பொருளுதவியும் அவர் வழங்கினார்.
உடல்பேறு குறைத்த பிள்ளையுடன் தாமான் பாகான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இக்குடும்பத்துக்கு உதவியை வழங்கியதாக சத்தீஸ் முனியாண்டி தெரிவித்தார்.
