
நாட்டில் மூன்றாவது மக்கள் நடமாட கட்டுப்பட்டு ஆணை காலத்தில் சட்ட விதிகளை பின்பற்ற தவறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனிதவள அமைச்சு எச்சரித்துள்ளது.
மனிதவள அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் மனிதவள அமைச்சு தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கினை ஆற்றி வரும்.
வேலை இடங்களில் sop விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மனிதவள அமைச்சு உறுதிப்படுத்தும என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
