
பத்து தொகுதி இத்தேர்தலில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் தொகுதியாக உள்ளது.
அதில் பிகேஆரின் பிரபாகரன், தேசிய முன்னணியின் கோகிலன் பிள்ளை, பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் 4 சுயேச்சைகள் போட்டியிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இத்தொகுதியில் இதற்கு முன்னர் இரு தவணைகளில் வெற்றி பெற்ற பிகேஆரின் தியான் சுவா, கட்சியை உதாசீனப்படுத்தி சுயேச்சையாகப் போட்டியிடுவது பிரபாகரனின் வாய்ப்பைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அவரின் அயராத உழைப்பு, கோவிட் காலத்தில் அவரின் மக்களுக்கான சேவை, மற்றும் அவர் சார்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இருக்கும் நன்மதிப்பு, அன்வார் மீதான நல்லெண்ணம் போன்றவை அவரைக் கரை சேர்க்கும் என நம்பப்படுகிறது.
