
தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியில் சார்பில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் நாட்டின் பிரதமராவார் என அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
இஸ்மாயில் சப்ரியை அம்னோவின் பேராளர்கள் பரிந்துரைத்து, உச்சமன்றம் அங்கீகரித்த பின்னர் அவரது சுவரொட்டிகளில் அவர்தான் பிரதமர் என்று பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாம் கட்சியின் தலைவராக இருந்தாலும் இஸ்மாயிலே அடுத்த பிரதமராக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை பிரதமராக நியமிக்கும் இறுதி முடிவு பேரரசருக்குத்தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
