
தம்மைப் பற்றி அவதூறாக புத்தகத்தில் விமர்சித்திருக்கும் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் Clare Rewcastle Brown (கிளேர் ரியூவ்காசல் பிரெளன்) மீது திரெங்கானு சுல்தானா Nur Zahirah (நூர் ஸஹிரா) தொடுத்திருந்த 10 கோடி ரிங்கிட் இழப்பீடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சுல்தானா மேல் முறையீடு செய்திருந்தார். திரெங்கானு மேம்பாட்டு நிதியத்தை அமைக்கவும் அதன் ஆலோசகராக ஜோ லோவை நியமிக்கவும் சுல்தானா சம்பந்தப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியூவ்காசலின் புத்தகத்தில் தாம் திரெங்கானு அரசின் விவகாரங்களில் தலையிட்டு ஜோ லோவுக்கு உதவி செய்ததாக பொய்யான விவரம் தம்மைக் களங்கப்படுத்தி இருந்ததாக சுல்தானா குறிப்பிடிருந்தார்.
