
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஆலயம் ஒன்றில் பேறு குறைந்த நபர் ஒருவர் சக்கர நாற்காலியுடன் ஆலயத்தில் நுழைந்து சாமி தரிசனம் செய்வதற்குத் தடை விதித்த விவகாரம் பிரச்சினையாகி உள்ளது.
அந்த ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை, பேறு குறைந்தோர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய தனி பாதை வசதி செய்து கொடுக்க ஆலய நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும், நாட்டில் உள்ள ஆலயங்கங்களில் பேறு குறைந்தோருக்கு ஆலய நிர்வாகங்கள் தகுந்த வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
