
கோடிக் கணக்கான மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல் தலைவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அந்தப் பணம் மக்களுக்கே திரும்பி வர அரசு நடவடிக்கை எடுக்கும் என நேற்று புத்ரா ஜெயா பள்ளிவாசலில் புத்தாண்டு உரை நிகழ்த்தியபோது பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கு மன்னிப்பே இல்லையென்றும் தாம் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் நிலையிலும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சராக பிரதமராக இருந்தோரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் நீதிமன்றத்தில் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டுமென அன்வார் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் மீது தேவையில்லாமல் விமர்சிப்போருக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.



