
ஷா ஆலம் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவர் குமரேசன் காலமானார்.
சமயச் சேவையிலும் மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கிய இவரின் மரணம் அதிர்ச்சி
யாகும்.
ஸ்ரீ மூடா வட்டாரத்தைச் சேர்ந்த வசதி குறைந்த மக்கள் நோய்தொற்று தாக்கத்தின் போது சிரமப்பட்டனர் அப்போது அந்த குடும்பங்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் உணவுகூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.
ஏழை மக்களுக்கு உதவும் ஒரு நல்லுள்ளம் படைத்த தலைவராக இவர் விளங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவு ஸ்ரீ மூடா வட்டார இந்தியர்களுக்கு பேரிழப்பு என்று சிலாங்கூர் இந்தியர் குரல் தலைவர் மணிமாறன் வேதனையோடு தெரிவித்தார்.
