
🔊To listen to this news in Tamil, Please select the text.
பள்ளிப் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என பள்ளிப் பேருந்து சங்கம் அறிவித்ததை அடுத்து நிலப் போக்குவரத்து ஏஜென்சி(அபாட்) அச்சங்கத்தோடு இன்று பேச்சு வார்த்தை நடத்தும் என தெரிகிறது.
அச்சங்கத்தின் தலைவர் Amali Munif Rahmad (அமாலி முனிஃப் ரஹ்மாட்) கூறும்போது, இன்றைய கூட்டத்தில் பேருந்து கட்டணம் பற்றியே விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர் ஓட்டுநர்கள் பற்றாக்குறை, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பேருந்து பராமரிப்புக்கான மிகையான செலவு ஆகியவை இத்தொழிலில் சிரமத்தை ஏற்படுத்துவதால், கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்து நடத்துவோர் தொழிலில் நிலைக்க முடியாது என்று அமாலி குறிப்பிட்டிருந்தார்.
