
சுங்கை சிப்புட் தாமான் கெலாடாங்கில் 4 வயது சிறுமிக்கு காது வெடிப்பால் ரத்தம் வடிந்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே புற்றுநோயால் இடது கண் பார்வை இழந்த இந்த சிறுமி இப்போது காது வெடிப்பால் அவதியுற்று வருகிறார்.
இன்று சிறுமியின் இல்லத்துக்குச் சென்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தேவையான அடிப்படை உதவிகளை செய்து கொடுத்தார்..
இம்மாதம் 16ஆம் தேதி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இந்த சிறுமிக்கு காதில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
MCO காலகட்டத்தில் சிறுமியின் பெற்றோர்களுக்கு வேலை இல்லை. இவர்களின் குறைகளை கேட்டறிந்த கேசவன் கணிசமான நிதி உதவிய வழங்கி உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
