
அரசாங்கத்தின் சட்டத்தை மீறி கோவிட் -19 சம்பவம் குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட குடும்ப மாதுவுக்கு,பெர்லிஸ் கங்கார் செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் தமது கைபேசியில் புலனத்தின் மூலம் பொய்யான தகவலை பரப்பியதாக ஆராவைச் சேர்ந்த 28 வயது நோர்ஜானா ரூஸ்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஊரடங்கு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட முதல் மலேசியராக இவர் திகழ்கிறார்.
