
🔊To listen to this news in Tamil, Please select the text.
தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ்ப்பள்ளிப் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு காண்பதற்கு தமிழ் தெரியாத பஞ்சாபியர் ஒருவரை கல்வியமைச்சு நியமித்தது நியாயமில்லை என்று மக்கள் சக்தி கட்சித் தலைவர் ஆர்.எஸ். தனேந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைத் தாம் இனப் பிரச்சினையாக ஆக்கவில்லை என்றும் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க ஒரு தமிழ் பேசும் தமிழர் கல்வி ஆலோசனை மன்றத்தில் இடம் பெறவில்லை என்ற ஆதங்கத்தில்தான் குறிப்பிடுவதாகக் அவர் குறிப்பிட்டார்.
