
சகோதரர்கள் இருவரிடம் ஓரின உறவைக் கொண்டதாக நம்பப்படும்,பேரா ஈப்போவிலுள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.13 மற்றும் 10 வயது நிரம்பிய அவர்களிடம் கேமரன் மலை தானாராத்தா,அந்த பணியாளரின் வீடு,ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தின் பழைய கட்டடம் மற்றும் தங்கும் விடுதியிலும் பலமுறை இச்செயலை அந்த பணியாளர் செய்துள்ளதாக பேரா மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் தலைமை துணை கமிஷினர் அணுவார் ஒஸ்மான் தெரிவித்தார்.மேல் விசாரணைக்காக கடந்த ஒரு வாரமாக அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
