
பத்து காவான் தாமான் தஞ்சோங் முத்தியாராவில் சிரமத்துடன் வாழ்க்கையை நகர்த்தி தனித்து வாழும் தாயான 28 வயது சிவசங்கரிக்கு பத்து காவான் தொகுதி கெராக்கான் மற்றும் தேசியக் கூட்டணி சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தமது இரண்டுப் பிள்ளைகளுடன் நிரந்தர வேலையின்றி அவதியுற்று வரும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பத்து காவான் தொகுதி கெராக்கான் கட்சியின் பேச்சாளர் ஆர்.சிவசுந்தரம்,தொகுதி கெராக்கான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ கே.பரமேஸ்வரன் மூலமாக சமூகநல இலாகாவின் உதவியையும் பெற்றுத் தர ஏற்பாடுகள் செய்யப் போவதாகவும் கூறினார்.
