
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை இந்துக்கள் அதன் சமய தத்துவத்திற்கு இணங்க, பக்தி நெறியோடு கொண்டாட வேண்டுமென செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
பக்தர்கள் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளைப் போடாமல், முகக் கவசம் அணிந்து, எந்தவிதமான பாதுகாப்புப் பிரச்சினையையும் ஏற்படுத்தாமல் சமயக் கூறுகளுக்கு இணங்க தைப்பூசத்தைக் கொண்டாட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த நோக்கங்களை மனதில் கொண்டு பிகேஆர் இளைஞர் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக சேவையை மேற்கொண்டு வருவதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.



