30.1 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

2 கோடி வெள்ளிக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் சிலாங்கூர் அரசு வாங்குகிறது!

To listen this news in Tamil, Click play button!

சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2 கோடி வெள்ளிக்கு 20 லட்சம் தடுப்பூசிகளை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இந்த 20 லட்சம் தடுப்பூசிகள் வாங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அறிவியல் துறை அமைச்சர் கைரியுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் மாநில அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கி இருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசாங்கம் நடத்தி வரும் இலவச நோய்த்தொற்று பரிசோதனையில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles