
🔊To listen to this news in Tamil, Please select the text.
வழக்குகளை எதிர்நோக்கும் அரசு ஊழியர்கள் தீர்ப்பு தெரியும் வரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதுபோல மக்கள் பிரதிநிதிகளையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ரைய்ஸ் யாத்திம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் சட்டம் எல்லா மக்களுக்கும் பொதுவானதாக இருப்பதாக அரசமைப்பு விதி வரையறுத்திருக்கும்போது, குற்றம் செய்து வழக்கை எதிர்கொண்டிருக்கும் எம்பிக்களுக்கும் செனட்டர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்- களுக்கும் அந்த விதிமுறை பொருந்தும் என்றும் அவர் சுட்டிக்கட்டினார்.
மேலும் அவர், நாடாளுமன்றத்தில் இன, பாலியல் ரீதியாகப் பேசும் எம்பிக்களுக்குத் தற்போதிருக்கும் 10,000 ரிங்கிட் அபராதத்தை அதிகாரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.



