
🔊To listen to this news in Tamil, Please select the text.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோரைத் தேடி, மீட்க உதவி வரும் மலேசிய அணியினரின் அயராத சேவையை மெச்சி பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் நற்பெயருக்குப் பாத்திரமாக அவர்களின் சேவை அமைந்திருப்பதை துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan (ரிசெப் தய்யிப் எர்டோகனும்) பாராட்டி இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
சேவை முடிந்து நாடு திரும்பும் அவர்களுக்கு சிறப்புப் படித் தொகையும், நற்சான்றிதழும் விருதுகளும் வழங்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



