
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய சொஸ்மா எனப்படும் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இன்னமும் தேவை என்று உள்துறை அமைச்சர் Saifudin Nasution (சைஃபுடின் நசுத்தியோன்) மக்களவையில் தெரிவித்தார்.
நாட்டில் கலவரச் சூழ்நிலை, பொது நலனுக்குப் பாதிப்பு ஏற்படும்போது, அச்சட்டம் மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அமைதி, கட்டொழுங்கை உறுதி செய்ய இச்சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்களைச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி கூறினார்.



