
பினாங்கு மாநில குடிநீர் விவகாரத்தில்,மசீச தனது அரசியல் விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டுமென பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கேட்டுக் கொண்டார்.
குடிநீர் விவகாரத்தில் முழுமையான விவரங்களை தெரிந்துக் கொள்ளாமல்,அரசியல் லாபத்திற்காக எதையும் பேசக்கூடாது.
மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் நியாயமான கட்டணத்தை செலுத்தி பயனடைந்து வருகின்றனர் என்றார்.
நாட்டில் மற்ற மாநிலங்களை விட பினாங்கு மாநிலத்தில் தான் குடிநீர் கட்டணம் நியாயமாக இருப்பதை மசீச போன்ற குறை சொல்லி திரியும் கட்சிகள் உணர வேண்டும்.
அதை விடுத்தது தினமும் பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை குறைக் கூறியே அரசியல் நடத்தும் போக்கை அக்கட்சி கைவிட வேண்டுமென பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.
