
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 81,000 பேர் பங்கு கொண்டுள்ளனர்.
இந்த சோதனையில் 3,000 பேருக்கு நோய்த் தொற்று அபாயம் இருப்பது கண்டறியப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் 20 முதல் 40 வயது வரையிலானவர்களாவர்.
அவர்களுக்கு அடுத்த நிலையில் சிறார்களும் மூத்த குடிமக்களும் உள்ளனர் என்றார் அவர்.
