
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 26,000 பெயர் நோய்த்தொற்றுக்கு பலியாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் இந்த கொடிய நோய்க்கு 2,993 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 200 பேர் இந்த நோயினால் பலியாகக் கூடிய சாத்தியம் இருப்பதாக
உலகச் சுகாதார அமைப்பின் அறிவியல் கவுன்சில் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான் தெரிவித்தார்.
மதிப்பிடப்பட்ட அந்த எண்ணிக்கை, இன்றைய 2,993 இறப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் குறைந்தது ஒன்பது மடங்கு அதிகம் என்று அவர் கூறினார்.
