
🔊To listen to this news in Tamil, Please select the text.
திவால் நிலையிலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கு , மார்ச் முதலாம் தேதி தொடங்கி, 3 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
திவாலாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் தாண்டியிருப்பதோடு, நீதிமன்ற உத்தரவு அல்லது விசாரணை நடத்தப்படாதவர்கள் , அந்த நிலையிலிருந்து விடுவிக்க கோரி விண்ணப்பம் செய்ய முடியுமென , பிரதமர் துறையின் சட்ட – கழக சீரமைப்பு அமைச்சர் அசாலினா ஒத்மான் சாய்ட் ( Azalina Othman Said ) தெரிவித்தார்.
2023 வரவு செலவு திட்டத்தில் , 50,000 ரிங்கிட்டுக்கும் கீழ் கடன் வைத்திருந்து திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், அந்த நிலையிலிருந்து உடனடியாக வெளியேற விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டது.



