
🔊To listen to this news in Tamil, Please select the text.
2022ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேம நிதியின் லாப ஈவு 5.35 விழுக்காடாகக் குறைந்திருப்பதாக அதன் வாரியம் அறிவித்துள்ளது.
கோவிட் தொற்றின் காரணமாக உறுப்பினர்கள் இபிஎஃபிலிருந்து சேமிப்பை மூன்று முறை மீட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டதால், அதன் கையிருப்பு குறைந்து லாபம் வெகுவாக பாதிக்கப்பட்டது. 2021இல் 6.1 விழுக்காடாக இருந்த வேளையில் அது 5.35 விழுக்காடாகக் குறைந்தது.
2022ஆம் ஆண்டுக்கான லாப ஈவு வழங்க ஊழியர் சேமநிதி வாரியம் மொத்தம் 4,540 கோடி ரிங்கிட்டை செலவழிக்கும் என தெரிகிறது.



