
பணி நிமித்தக் காரணங்களுக்காக அமைச்சு அல்லது இலாகாவும் வழங்கும் அனுமதி கடிதத்தையும் சாலைத் தடுப்புகளில் போலீசார் ஏற்றுக் கொள்வர்.
தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறைக்கான நடவடிக்கை பிரிவு தலைமை உதவி ஆணையர் எம்.வி. ஸ்ரீகுமார் எம். நாயர் கூறினார்.
மிட்டி எனப்படும் அனைத்துலக வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சாக இருந்தாலும் வேறு அமைச்சுகள் மற்றும் இலாகாக்களாக இருந்தாலும் பயண அனுமதிக்கான கடிதங்களை ஏற்றுக் கொள்ளும்படி தேசிய போலீஸ் படைத் தலைவர் பணித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
