
🔊To listen to this news in Tamil, Please select the text.
தாவாவ் விமான நிலையத்திலிருந்து ஆவணமற்ற கள்ளக் குடியேறிகள் வெளியேற லங்சம் வாங்கிக் கொண்டு அனுமதித்த 9 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.
9 பேரில் ஐந்து குடிநுழைவு அதிகாரிகள், கள்ளக் குடியேறிகள் ஒவ்வொருவரிடமும் தலா 2,500 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 30 லிருந்து 41 வயதுமிக்க அவர்கள் வியாழனன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் தவிர்த்து, கைது செய்யப்பட்ட நால்வர் ஆள்கடத்தல் நடவடிக்கையில் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளனர். அந்த நடவடிக்கையின்போது, கள்ளத்தனமாக சபாவில் நுழைந்த 14 அந்நிய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



