
பத்து ஆராங் அரசாங்க கிளினிக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் 5,000 வெள்ளி மதிப்புள்ள இரண்டு கூடாரங்கள், 50 நாற்காலிகள், கணினி
மற்றும் மின் விசிறிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.
இங்கு பெய்த கடுமையான மழையால் அந்த கிளினிக் முன் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் சேதமுற்றன.
இதனை கருத்தில் கொண்ட அவர் உடனடியாக இந்த உதவிகளை வழங்கினார்.
இந்த அரசாங்க கிளினிக்கில் மக்கள் அதிகளவில் வருகிறார்கள்.
இவர்கள் இங்கு அமரும் வகையில் இரண்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சுவா தெரிவித்தார்.
இந்த கூடாரங்கள் அமைக்கும் பணிக்கு கவுன்சிலர் எண்டி, கிராமத் தலைவர் தேவா உட்பட பலரும் உதவி புரிந்தனர்.
