
🔊To listen to this news in Tamil, Please select the text.
மின்னியல் அழைப்பு டாக்சிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்காமல் சந்தை நிலவரத்திற்கே விட்டுவிட அரசு திட்டமிடுவதாகப் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக்) தெரிவித்தார்.
மின்னியல் அழைப்பு டாக்சி ஓட்டுநர்கள் தாங்கள் வழங்கும் சேவைக்கு ஏற்ற வகையில் வட்டார வாரியாக கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டுமென்று சில ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தங்களின் வருமானம் ஒரு நிலையில்லாது இருப்பதாகவும், இந்தச் சேவையில் கடுமையான போட்டியும் எரிபொருள், டோல் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் மற்றும் இதர செலவுகள் யாவும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு மேலதிய செலவைத் தருவதாக அவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
