
🔊To listen to this news in Tamil, Please select the text.
லோரி, பேருந்து, டாக்சி, மின்னியல் அழைப்பு வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு சமூகப் பாதுகாப்பு காப்புறுதியான சொக்சோ சந்தாவைச் செலுத்துவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து துணையமைச்சர் Azmi Abibola (அஸ்மி அபிபோலா) மக்களவையில் தெரிவித்தார்.
அதற்கான சட்ட மசோதாவை 12 மேலவை உறுப்பினர்கள் விவாதித்த பின்னர், அது அங்கீகரிக்கப்பட்டது.
பிஎஸ்வி எனப்படும் போதுச் சேவை வாகனங்கள் மற்றும் ஜிடிஎல் எனப்படும் பொருள் வாகன போக்குவரத்தைப் உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, சொக்சோ திட்டத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
லோரி, பேருந்து, மின்னியல் அழைப்பு டாக்சி ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக அஸ்மி அபிபோலா தெரிவித்தார்.
