
🔊To listen to this news in Tamil, Please select the text.
திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், ஒருவித அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவில், சிறுவன் ஒருவன் திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான்.
https://youtube.com/watch?v=x16xbYXERmM%3Fautoplay%3D0%26enablejsapi%3D1%26origin%3Dhttps%253A%252F%252Fwww.puthiyathalaimurai.com%26widgetid%3D1
அப்போது அந்த சிறுவனின் உதட்டில் தலாய் லாமா முத்தம் கொடுக்கிறார். பின் தன்னுடைய நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி தலாய்லாமா சொல்கிறார். இந்த காட்சி அப்படியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ள அவலமும் நடந்துள்ளது.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, தலாய் லாமாவுக்கு கடும் கண்டனங்கள் குவியத்தொடங்கின. ‘யாருமே செய்யக்கூடாத இப்படியொரு செயலை, ஒரு ஆன்மீக தலைவர் செய்வது கண்டிக்கத்தக்கது’ என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தலாய் லாமா செய்தது அத்துமீறல் என பலரும் காட்டமாக கருத்து தெரிவித்தனர்.

Dalai Lama
ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டில், தலாய் லாமா தனது வாரிசு ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றால், அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுவனிடம் அத்துமீறிய நிகழ்வும், கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. தொடர் சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் நிலையில், தலாய் லாமா சிறுவனிடம் தான் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவில், “அந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அந்தச் சிறுவனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
https://www.facebook.com/plugins/post.php?width=552&height=500&href=https%3A%2F%2Fwww.facebook.com%2F100044156933342%2Fposts%2Fpfbid02AjRGBSReaBgVVG8jiXR1b6Ew5wMUi4eKKR6CHxCTrtnCcnsMQFe2bsVkzE2B6PP9l%2F%3Fsfnsn%3Dwiwspmo%26mibextid%3D6aamW6
இவ்விஷயத்தில் குழந்தையிடையே தலாய் லாமா அத்துமீறியதற்காக அவர் எந்தளவுக்கு எதிர்க்கப்பட்டாரோ, அதேயளவுக்கு அச்சம்பவத்தை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்து சிரித்த அங்கிருந்த மக்களும் அவர்களின் மனநிலையும் பலராலும் எதிர்க்கப்பட்டது. அந்தவகையில் இச்சம்பவத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது.
