27.9 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

அந்நியத் தொழிலாளர்கள் சார்ந்த நாடுகள் ஏஜெண்டுகளின் சேவையை வலியுறுத்துகின்றன

🔊To listen to this news in Tamil, Please select the text.

அந்நியத் தொழிலாளர்களை அனுப்பும் நாடுகள் ஏஜெண்டுகளின் மூலம் தொழிலாளர்களை அனுப்பும் விதிமுறையை வகுத்திருப்பதால், முதலாளிகள் நேரடியாகத் தொழிலாளர்களைத் தருவிக்க இயலாது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மக்களவையில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்நிய நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் மேற்கண்ட நிபந்தனை குறிப்பிடப்பட்டுள்ளதால் அதனை மீறி நாம் செயல்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்நிய நாட்டு ஏஜென்டுகள் தன்னிச்சையாக கட்டணத்தை வரையறுத்து செயல்படுவதால், தொழிலாளர்களைத் தருவிக்கும் கட்டணம் வானளாவ உயர்ந்து பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles