
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிழக்குக்கரை ரயில் திட்டமான இசிஆர்எல்லின் கட்டுமானம் இது வரை 42.06 விழுக்காடு பூர்த்தி அடைந்து விட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
இத்திட்டம் 2026ஆம் ஆண்டு முழுமையாகப் பூர்த்தி அடையும் வகையில் கட்டுமானம் துரிதகதியில் இயங்கி வருவதாகவும் தற்போது அது கடினமான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
16.39 கிலோ மீட்டர் இரட்டை சுரங்கப் பாதை வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதுவே இத்திட்டத்தில் கடுமையான பணி என்றும் அவர் விவரித்தார். இந்தச் ரயில் சுரங்கப் பாதையானது பகாங் புக்கிட் திங்கியை சிலாங்கூர், கோம்பாக்குடன் இணைக்கும் கட்டமாகும்.
சுரங்கப் பாதைக்கான பணியை மேற்கொள்ள நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்துவதாகவும் அதில் 300 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.
