
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு சங்கடம் விளைவிக்கும் வகையில் லிம் கிட் சியாங் அம்னோவிற்கு எதிராகப் பேசுவதைக் குறைத்துக் கொள்வதோடு, வாயை மூடிக் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Fuad Zarkasi (புவாட் ஸர்க்காசி) குறிப்பிட்டுள்ளார்.
கிட் சியாங் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும் சிண்டு முடிப்பதாக அவர் சாடினார்.
தீவிர அரசியலில் இருந்து விலகிய கிட் சியாங், சிறைத் தண்டனையிலிருந்து விடுபட நஜிப் ரசக்கிற்கு அரச மன்னிப்பைப் பெற அம்னோ துடியாய் துடிப்பதற்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வருவதோடு நஜிப் சிறையிலிருந்து மீண்டாலும் அம்னோவின் பழைய செல்வாக்கை மீட்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது அம்னோ தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
