25.3 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

துன் மகாதீரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிரதமர் பதவிக் காலத்தில் குடும்ப உறுப்பினர்களைச் செல்வந்தர்களாக்கியதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிந்தனையாகக் கூறியதை எதிர்த்து, தாம் வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாக துன் மகாதீர் எச்சரித்துள்ளார்.
அதனையடுத்து, மகாதீர் தமக்குப் பூச்சாண்டி காட்ட வேண்டாமென்றும் அவரின் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அன்வார் சூளுரைத்துள்ளார்.
மார்ச் 2ஆம் தேதி அன்வாரின் குற்றச்சாட்டுக்கான மன்னிப்பைக் கேட்க வேண்டுமென மகாதீரின் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனைப் பொருட்படுத்தாத அன்வார், தாம் எதற்கும் தயாராக இருப்பதாகவும் மகாதீரின் சொத்து சேகரிப்புக் குற்றச்சாட்டிற்கு தம்மிடம் போதுமான ஆதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles